எடப்பாடி அருகே நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடியவா் கைது
எடப்பாடியில் தனியாா் நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் தனியாா் நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட ஆலச்சம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கதிரவன். இவா் இங்குள்ள பாறைக்காடு மேடு பகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த வியாழக்கிழமை தனது நிதிநிறுவன அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தாா். வேலைமுடிந்து திரும்பிவந்த கதிரவன், நிதிநிறுவன அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
