சட்டசபை நேரலையில் மூழ்கியது தமிழகம்!
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப த.வெ.க. அரசு எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. ஒளிவு மறைவு இல்லாத அரசு நிர்வாகத்தை வழங்குவதற்கான முதல் படி என கூறலாம். ஆனால், பொதுமக்கள் சட்டசபை நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களா? பார்த்தால் அதுபற்றி என்ன நினைக்கிறார்கள்? இந்த கேள்விகளை மக்களிடமே கேட்டோம்...
சட்டசபை நிகழ்வை தொடர்ந்து பார்க்கிறேன். இப்போதுதான் உண்மை வெளி வருகிறது. மக்கள் பிரச்னைகளை பேசாமல் தி.மு.க. உறுப்பினர்கள் டேபிள், சேர் எல்லாம் நாங்கள் அமைத்தோம் என்று அவர்களின் பெருமைகளை மட்டுமே பேசுகிறார்கள். அரசு பணத்தில் எம்.எல்.ஏக்கு கார் வேண்டுமா என கேட்கிறார்கள். அரசு பணத்தில் கருணாநிதிக்கு ஏன் நினைவு சின்னம் என கேட்டால் பதில் இல்லை. எதிர்க்கட்சியில் பா.ம.க சௌமியா, அ.ம.மு.க காமராஜ் மட்டுமே மக்கள் நலன் சார்ந்து பேசுகிறார்கள்.
--சகாபுதீன், கரும்புக்கடை.




