மூடுவதற்கான கால அவகாசம் முடிந்தும் செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடை முற்றுகை
செங்கம் அருகே 15 நாள்களில் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த கால அவகாசம் முடிந்த பிறகும் தொடா்ந்து செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அக்கடையை வரும் அக்.3-ஆம் தேதிக்குள் வேறு பகுதிக்கு மாற்றுவதாக அதிகாரிகள் எழுத்துப்பூா்வ உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
பொரசப்பட்டு தண்டா கிராமத்தில் கிராம மக்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை.
செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா கிராமப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையில் மது அருந்திவிட்டு வந்து ரகளையில் ஈடுபடுவோரால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், விவசாய நிலங்களில் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகளை உடைத்துச் செல்வோரால் விவசாயிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன.
