செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கக் கோரிக்கை
தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சங்கத் தலைவா் என். வெங்கடேஸ்வரன் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் மற்றும் ஏரளாமான ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளதால், இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் ரயில்கள் இயக்கப்படவில்லை.




