அவல நிலையில் உறைவிட பள்ளி: அலட்சியத்தில் அதிகாரிகள்
ஹாசன்: மாட்டு கொட்டகை போன்ற ஷெட்டில், உறைவிட பள்ளி நடத்துவது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. இங்கு குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லை.
ஹாசனின், சாந்தி கிராமத்தில் அம்பேத்கர் உறைவிட பள்ளி செயல்படுகிறது. கடந்த 2017ல் வாடகை கட்டடத்தில், அந்த உறைவிட பள்ளி திறக்கப்பட்டது. இது, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், 2021ல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. மாட்டு கொட்டகையை விட, மோசமான ஷெட்டில் உறைவிட பள்ளி நடத்துகின்றனர்.
