தி.மு.க., செந்தில் பாலாஜி மீது சொந்த கட்சியினரே புகார்
கோவை: கட்சி மறுசீரமைப்பு பணியில், தலைமையின் உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக, கோவை தி.மு.க.,வினர் புகார் கூறுகின்றனர்.
சட்டசபை தேர்தல் தோல்வியால், தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக கிளை முதல், மாவட்டம் வரை மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவை தி.மு.க.,வும், மூன்று மாவட்டங்களில் இருந்து ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. மேலும், கள ஆய்வு செய்து, சீரமைப்புக்கு பரிந்துரை செய்ய, மாவட்ட வாரியாக பார்வையாளர்களை கட்சி தலைமை நியமித்துள்ளது.



