மதுரையில் 2 நாட்களாக மழை
மதுரை: மதுரையில் 2 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் இரவில் குறைந்துள்ளது.
மதுரையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் செப்டம்பரிலும் நீடிக்கிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் உடல், மனப்புழுக்கத்தில் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் மாலை வேளையில் மழை பொழிந்தது. மதுரை நகர தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடியது.
நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ.,) : மதுரை வடக்கு 17.6, தல்லாகுளம் 12.8, சிட்டம்பட்டி 5.4, கள்ளந்திரி 2.2, இடையபட்டி 1, தனியாமங்கலம் 16, மேலுார் 8, விமான நிலையம் 0.3.


