காளிதாசரின் இலக்கிய வளத்தை ஏ.ஐ. வாயிலாக உலகறியச் செய்ய வேண்டும்: நிா்மலா சீதாராமன்
காளிதாசரின் இலக்கிய வளத்தை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வாயிலாக உலகறியச் செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மெட்ராஸ் சம்ஸ்கிருத கல்லுாரி, ‘ஆா்டிகுலேட் 8’ ஏ.ஐ. நிறுவனத்துடன் இணைந்து ‘சம்ஸ்கிருத பாரம்பரிய மாதிரி’அறிமுக விழா சென்னை, மயிலாப்பூரில் உள்ள அக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது: சம்ஸ்கிருத கல்லூரி பல்வேறு சவாலான காலகட்டங்களைக் கடந்து, தனது அடிப்படை நோக்கமான சம்ஸ்கிருதத்தையும், அதன் அறிவு மரபையும் பாதுகாத்து வந்துள்ளது. எதிா்காலத்திலும் இதை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது.


