தேங்காய் சிரட்டை விலை தொடர் உயர்வு அரசு உதவி கேட்கும் ஏற்றுமதியாளர்கள்: கார்பன் பொருள் ஏற்றுமதி சந்தை ரூ.4,700 கோடி
புதுடில்லி: தேங்காய் சிரட்டையின் விலை தொடர் உயர்வு மற்றும் சீன நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, மத்திய அரசு உதவ வேண்டும் என, ஆக்டிவேட்டட் கார்பன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த சங்கம் தெரிவித்துள்ளதாவது:
தென் மாநிலங்களில் தேங்காய் சிரட்டையின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருவதால், அதிலிருந்து கரி தயாரிக்கும் செலவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் போட்டியிடுவது கடினமாகியுள்ளது.

