இறுதி கட்டத்தை எட்டியுள்ள புகழூர் கதவணை பணி
கரூர்:கரூர் அருகே, காவிரியாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் கதவணை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கரூர் மாவட்டம், புகழூரில் காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 406.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கரூர் நஞ்சை புகழூர், நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு, நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது.
கடந்த, 2020 நவ., மாதம் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய
