விதவைகளுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகள்! கவனிக்க வேண்டிய நீதிமன்ற தீர்ப்புகள்!
விதவைகளுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகள் தொடர்பாக கவனிக்க வேண்டிய நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி..
கணவரின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை தொகையைப் பெறும் பெண்களுக்கும், மறுமணம் செய்வோருக்கும் விதவை ஓய்வூதியம் வழங்கலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் குறித்த தகவல்களை அறிய வேண்டியது அவசியம்.
கணவர் இறந்தபோது குழந்தையில்லாமல் இருந்த ஒரு பெண், மறுமணம் செய்து கொண்டு பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்தாலும், "குழந்தையற்ற விதவை" என்பதற்கான ஓய்வூதியத் தகுதியை இழக்கமாட்டார் என்று கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

