பெண் டாக்டரிடம் ரூ.22 லட்சம் மோசடி
பெங்களூரு: திருமண வலைதளம் வழியாக அறிமுகமாகி, பெண் டாக்டரிடம், 22 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின், ரிச்சர்டு டவுனில், 28 வயது பெண் டாக்டர் வசிக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக, திருமண வலைதளத்தில், கடந்த, 2025 டிசம்பர் 20ம் தேதி, தன் விபரங்களை பதிவு செய்திருந்தார்.
பதிவு செய்த சில நாட்களில், கணேஷ் பர்பன் என்பவர், அந்த பெண் டாக்டரை தொடர்பு கொண்டார். டாக்டர் என அறிமுகம் செய்த அவர், கண் மருத்துவ நிபுணர் என்றார்.

