மீண்டும் தலைதுாக்கும் அ.தி.மு.க., ஆதரவு நிறுவனம்!
நாளிதழை மடித்தபடியே, “தியாகிகள் ஸ்துாபியை பந்தாடுறாங்க பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எந்த ஊருல வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“சுதந்திர போராட்ட காலத்துல, 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தை நடத்தினாங்களே... இதன் நினைவா, மதுரை தமுக்கம் மைதானம் பக்கத்துல, தியாகிகள் ஸ்துாபி அமைச்சிருந்தாங்க பா...


