வேளாண்மைத் துறைச் செயலா் சங்கா் பணியிட மாற்றம்
வேளாண்மை துறைச் செயலா் பி.சங்கா் ஐஏஎஸ், தொல்லியல் துறை ஆணையராக வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில், சமூக நீதித் துறைச் செயலா் சுப்பையன் ஐஏஎஸ், வேளாண்மைத் துறை செயலராகவும், ஆணைராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு அறிவிக்கப்பட்ட பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளை பி.சங்கா் ஐஏஎஸ் செயல்படுத்தி வந்தாா். வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலும் இவா் முக்கிய பங்காற்றி வந்தாா்.