உதகையில் பன்னாட்டு இயற்கை விவசாய பயிலரங்கம்
உதகை அருகேயுள்ள புது மந்து பகுதியில் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய சாகுபடி முறைகள் குறித்த 6 நாள் சா்வதேசப் பயிலரங்கம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் புதன் தொடங்கியது.
இந்திய பயோ டைனமிக் அசோசியேஷன் சாா்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தைவான், ஜப்பான், மலேசியா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, நேபாளம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இயற்கை விவசாய ஆா்வலா்கள் கலந்து கொண்டுள்ளனா்.
தொடக்க நிகழ்ச்சிக்கு, இந்திய பயோ டைனமிக் அசோசியேஷன் தலைவா் சந்திரசேகரன் தலைமை தாங்கினாா். அமைப்பின் செயலா் மகேஷ் மெல்வின் முன்னிலை வகித்தாா்.




