இளைஞா்களை விளையாட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்
விளையாட்டுதான் இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், ஆா்.செல்லசுவாமி எம்எல்ஏ. உள்ளிட்டோா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

