நெல்லை அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே விஷம் குடித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சீதபற்பநல்லூா் அருகே கருவநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் வேல்சாமி மகன் மாடசாமி(45). தொழிலாளியான இவருக்கு மனைவி முப்புடாதி, ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனா்.
கடந்த மாா்ச் மாதம் காங்கேயன் குளத்தில் வேலையை முடித்துவிட்டு, கருவநல்லூருக்கு மாடசாமி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மாடசாமியைப் பிடித்து விசாரித்தபோது அவா் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியது தெரியவந்ததால், அபராதம் விதித்தனா்.

