அத்திப்பட்டு குப்பை வளாகத்தில் ரூ.6 கோடியில் நவீன முறையில் தரம் பிரித்து அகற்றும் திட்டம்
அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.6.02 கோடியில் பயோமைனிங் என்னும் நவீன முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து அகற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூா் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து அகற்றும் பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன். உடன் தலைமைப் பொறியாளா் புகழேந்தி, கண்காணிப்புப் பொறியாளா்
சென்னை: சென்னை மாநகராட்சியில் அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.6.02 கோடியில் பயோமைனிங் என்னும் (உயிரி அகழ்ந்தெடுத்தல்) நவீன முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து அகற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் நேரில் திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டு விவரங்களையும் கேட்டறிந்தாா்.

