அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் விற்பனை மையம்
தருமபுரி மண்டலத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், கிருஷ்ணகிரியில் முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மையம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - File photo
பொதுமக்களின் சேவையை நோக்கமாக கொண்டு இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகம், வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு இடங்களில் சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை நிலையங்களை அமைத்து வருகிறது.

