அரசு துறைகளில் நிகழ்நேர கண்காணிப்பு விரைவில் அறிமுகமாகிறது: நிதி மேலாண்மை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நிதி வருவாய்களை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, மாநிலத்தின் பொது நிதி மேலாண்மை அமைப்பை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் வலுப்படுத்தும் நோக்கில், மிக முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அதிநவீன இ-குபேர் மைய வங்கி தீர்வுத் தளத்துடன் இணைந்து, பாதுகாப்பான மற்றும் விரைவான இ-பேமெண்ட் எனும் மின்னணு கட்டண முறையை அரசு ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

