கொடைக்கானல் மலைச் சாலையோரம் கிடக்கும் காலி மதுப் புட்டிகள்: பாதிப்படையும் வன விலங்குகள்
கொடைக்கானல் மலைச் சாலைகளில் மது அருந்திவிட்டு காலி மதுப் புட்டிகளை விட்டுச் செல்லும் சமூக விரோதிகளால் வன விலங்குகள் பாதிப்படைவதாக விலங்கு நல ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தனா்.
மஞ்சளாறு அணை பகுதியில் சமூக விரோதிகள் விட்டுச் சென்ற காலி மதுப்புட்டிகள்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். விடுமுறை நாள்களில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங் களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்களில் பலா் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகளை மலைச் சாலைகளிலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனா். இவற்றை அங்கு திரியும் குரங்குகள் எடுத்து குடித்து வருகின்றன.




