சதுர்த்தி நாளில் ஹிட்டியங்கடி விநாயகரை தரிசிக்கலாமே!
- நமது நிருபர் - உடுப்பி என்றவுடன், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது ஸ்ரீ கிருஷ்ணர் மடமும், கோவிலும்தான்.
உடுப்பி என்றவுடன், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது ஸ்ரீ கிருஷ்ணர் மடமும், கோவிலும்தான். இம்மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலும் உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தரிசனம் செய்ய வேண்டிய கோவிலில், இதுவும் ஒன்றாகும்.
உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகாவில், ஹட்டியங்கடி கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இது ஏழாவது அல்லது எட்டாவது நுாற்றாண்டில் கட்டப்பட்ட புராதன கோவிலாகும். வராஹி ஆற்றங்கரையில் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்துள்ள விநாயகர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
துளு நாட்டை ஆட்சி செய்த ஆலுாப மன்னரின் தலைநகராக இருந்தது பட்டிநகர். காலப்போக்கில் இந்த பெயர் ஹட்டியங்கடியானது. அவரது காலத்தில் கோவில் கட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஹொய்சாளர்கள் மற்றும் ஹொனகம்பலா மன்னர்கள் ஆட்சியில், இங்கு கவியரங்கம் நடந்ததாம். 16ம் நுாற்றாண்டில், தலைமை அர்ச்சகராக இருந்த ராமபட்டர், அடுத்த 300 ஆண்டுகளில் ஹட்டியங்கடி, உலக பிரசித்தி பெறும் என, ஆரூடம் கணித்தார். அந்த கணிப்பு தற்போது உண்மையாகியுள்ளது.


