நேபாள வெள்ளத்தில் உயரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி
மதுரை சிம்மக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியக் கலாசார நட்புறவுக் கழக நிா்வாகக் கூட்டத்தில் நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மாநில பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவா் ராஜரத்தினம் உள்ளிட்டோா்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு இந்தியக் கலாசார நட்புறவுக் கழகம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை சிம்மக்கல்லில் உள்ள தனியாா் விடுதியில் இந்தியக் கலாசார நட்புறவுக் கழகத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலப் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ராஜரத்தினம் முன்னிலை வகித்தாா்.


