பள்ளிப் பாடத்திட்டத்தில் சியாமா பிரசாத் முகா்ஜியின் பங்களிப்புகள் சோ்க்கப்படும்: மேற்கு வங்க முதல்வா் அறிவிப்பு
மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி - படம் - ஏஎன்ஐ
பாரதிய ஜன சங்க நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜி மற்றும் பாரத சேவாசிரம சங்க நிறுவனா் ஸ்வாமி பிரபானந்தா ஆகியோரின் பங்களிப்புகள் குறித்த தகவல்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்கப்படும் என மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூட்டு மானியமாக ரூ.300 கோடி நிதியை பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய திரிணமூல் அரசு விளையாட்டு, பூஜைகள், கண்காட்சி மற்றும் இமாம்களுக்கான படிகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததே தவிர பள்ளிகளை கவனிக்கத் தவறிவிட்டது.

