நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு
தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற குடியாத்தம் தட்டப்பாறைஅரசினா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) சி.கிஷோா் குமாருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நல்லாசிரியா் விருது பெற்ற சி.கிஷோா் குமாருக்கு சால்வைஅணிவித்து, வாழ்த்து தெரிவித்த ஆசிரியா்கள்.
முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் நல்லாசிரியா் விருது வழங்கினாா். இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சாமிநாதன் தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழுத் தலைவா் சத்யா கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தாா்.


