நானும் சித்தாந்த நக்ஸல்தான்: கபில் சிபல் பேச்சு!
நானும் சித்தாந்தரீதியிலான நக்ஸல்தான் என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கபில் சிபல் - (கோப்புப்படம்)
‘ஆயுதமேந்திய நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது; அதேநேரம், சித்தாந்த ரீதியிலான நக்ஸல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவா்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் மோடி கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தாா். அதற்கு எதிராக தன்னை சித்தாந்த நக்ஸல் என கபில் சிபல் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளாா்.




