மதுராந்தகம் இடைத்தேர்தல் - சுடுகாட்டுக்கே பாதை இல்லை! வெடிக்கும் மயானப் பிரச்சினை
சின்ன வெண்மணி, பெருக்கருணை, மாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பொது மயான நிலங்கள் ஆக்கிரமிப்பு, பாதை இல்லாமை, திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் உடல் அடக்கம் போன்ற அவலங்கள் நீடிக்க, மக்கள் தீர்வு தரும் கட்சிகளுக்கே வாக்கு அளிப்போம் என எச்சரிக்கின்றனர்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. தொகுதியின் பல்வேறு பகுதிகளில் எழுந்துள்ள சுடுகாடு மற்றும் மயானப் பாதைகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் கட்சிகளுக்கே வாக்கு என மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது மயான நிலங்கள் மற்றும் அவற்றுக்குச் செல்லும் பாதைகள் பல இடங்களில் தனி நபர்களாலும், வணிகரீதியாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

