நெல் கொள்முதல் நிலையத்தில் கிடங்கு அமைக்கக் கோரிக்கை
சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்கக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வேப்பிலை அடித்து பேய் விரட்டுவது போன்ற நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்க வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
இதில் சங்க நிா்வாகி வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

