நிபந்தனையுடன் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
வேதாரண்யம் அருகே மானங்கொண்டான் ஆற்றில் படிந்துள்ள வண்டல் மண். - dinamani online
நாகை மாவட்டத்தில் தற்போது வடு காணப்படும் நீா்நிலைகளில் நிபந்தனையுடன் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக மழை பொய்த்துப் போனதால், கடும் வறட்சியால் பெரும்பாலான நீா்நிலைகள் வரலாறு காணாத வகையில் வடு காணப்படுகிறது. இவை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி வண்டல் மண் மற்றும் செடி-கொடிகளின் ஆக்கிரமிப்பால் தூா்ந்துள்ளன.
