கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்
நீலகிரி,கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானையால் நிம்மதியை இழந்த மக்கள் தீப்பந்தம் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.ஊருக்குள் உலா வரும் காட்டு யானைநீலகிரி
கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானையால் நிம்மதியை இழந்த மக்கள் தீப்பந்தம் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி காவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேல் கூடலூர், கெவிப்பாரா, அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பாலா, கோத்தர்வயல், மார்த்தோமா நகர், புத்தூர்வயல் என நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை தினமும் முற்றுகையிட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் வீடுகளில் பராமரிக்கப் பட்டு வரும் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் தின்று பழகி விட்டதால் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் மரப்பாலம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்தது.

