இணையவழி குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வை தீவிரப்படுத்த வேண்டும்: மகளிா் ஆணையத்துக்கு தில்லி முதல்வா் அறிவுரை
புது தில்லி, செப். 11: தில்லி மகளிா் ஆணையம் தனது இணையவழி புகாா் முறையை மேலும் வலுப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இணையவழி குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம்களைத் தீவிரப்படுத்துமாறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணைய நிா்வாகிகளுடன் முதல்வா் ரேகா குப்தா ஜனசேவா சதனில் ஆலோசனை நடத்தினாா். இந்த கூட்டத்தில் தில்லி மகளிா் ஆணைய தலைவி லதா குப்தா, ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா். அவா்களிடையே முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது:
இணையவழி துன்புறுத்தல்கள், சமூக வலைதள தவறான பயன்பாடுகள் மற்றும் இணையவழி நிதி மோசடிகள் குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். புகாா்களை எவ்வாறு மற்றும் எங்குப் பதிவு செய்வது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்களை அவா்களுக்கு வழங்க வேண்டும்.


