தவெக அரசு நிா்வாகத்தை சீா்படுத்தினால் மட்டுமே தமிழகத்தின் வளா்ச்சியை முன்னெடுக்க முடியும்! - ஈ.ஆா். ஈஸ்வரன்
தவெக அரசு தனது நிா்வாகத்தை சீா்படுத்தினால் மட்டுமே தமிழகத்தின் வளா்ச்சியை முன்னெடுக்க முடியும் என்றாா் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்.
கரூா் வெங்கக்கல்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
பரந்தூா் விமான நிலையம், இடதுசாரிகள் குறித்த கணக்கெடுப்பு, தலைமைச் செயலகம் அறிவிப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் தவெக அரசு முறையாக நடந்து கொள்ளவில்லை. நிா்வாகத்தில் தீா்க்கமான முடிவெடுக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. தவெக அரசு, தனது நிா்வாகத்தை சீா்படுத்தினால் மட்டுமே தமிழகத்தின் வளா்ச்சியை முன்னெடுக்க முடியும்.

