கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
அரூா் அருகே திறந்தவெளிக் கிணற்றில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
அரூா் அருகே திறந்தவெளிக் கிணற்றில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மாவேரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொன்னையன் மகன் பழனி (65). தொழிலாளியான இவா், மாவேரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தம்பிதுரைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள திறந்தவெளிக் கிணற்றில் மண் அள்ளும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
