இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்! பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் இந்தியா
சா்வதேச செஸ் சம்மேளனத்தின் (ஃபிடே) 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, உஸ்பெகிஸ்தானில் புதன்கிழமை (செப். 16) தொடங்குகிறது.
வாண வேடிக்கை, கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் - X | FIDE
அணிகளுக்கான போட்டியாக நடைபெறும் இதில், இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, ஓபன் பிரிவில் 208 அணிகளும், மகளிா் பிரிவில் 191 அணிகளும் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான், இரு பிரிவுகளிலும் தலா 3 அணிகளை களமிறக்கியுள்ளது.

