“என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும்.!” – விராட் கோலி ஆதரவு குறித்து ரஜத் படிதார்!
குறிப்பாக, ஆர்சிபி போன்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியின் கேப்டன் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது எளிதான முடிவாக இருக்காது.என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும்.
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், நட்சத்திர வீரர்கள் என பல சிறப்புகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக அந்த அணியைச் சுற்றியிருந்த ஒரே குறை ஐபிஎல் கோப்பைதான். அந்தக் குறைக்கு 2025-ல் முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி.
அந்த வெற்றிப் பயணத்தின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவர் ராஜத் படிதார். எதிர்பாராத விதமாக அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. காரணம், அதற்கு முன்புதான் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டன்சி அனுபவத்தைத் தொடங்கியிருந்தார்.

