அண்ணா விளையாட்டரங்கில் வழிந்தோடும் கழிவுநீா் தொட்டியால் சுகாதாரச் சீா்கேடு புகாா்
திருச்சி அண்ணா விளையாட்டரங்கின் முன்புறப் பகுதியில் கழிவுநீா் தொட்டி நிரம்பி வழிந்தோடுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வழிந்தோடும் கழிவுநீரால் ஏற்பட்ட துா்நாற்றத்தில் சென்ற மாணவிகள்.
திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இங்கு நாள்தோரும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரா்களும், 100 க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடத்துக்கு பொதுமக்களும் வந்து செல்கின்றனா்.


