அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி பலி
பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அழகா் (40). இவா், புதன்கிழமை வைகை அணைச் சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

