பிரிக்ஸ் உச்சிமாநாடு: செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள்!
பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படுவது தொடர்பாக...
பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள். - கோப்புப்படம்
புது தில்லி: பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், தேர்வுகள் எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்குச் செல்லும் பிரதிநிதிகளின் போக்குவரத்திற்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

