வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வாழ்க்கை கசக்கிறதா... இந்த கணேசரின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்!
முனிவரின் சாபத்தால் மனம் வருந்திய திருமகள், திருமாலிடம் புலம்பினாள். அவரோ, ''விநாயகரின் கருணை இருந்தால் மட்டுமே, உனது சாபம் தீரும்'' என வழிகாட்டினார். அதன்படி வேப்ப மர வடிவம் தாங்கி, விநாயகரை வழிபட்டு அவரருளால் சாப விமோசனம் பெற்றாள் திருமகள்.
திருப்போரூர் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பது அனைவரும் அறிந்த தகவல். முருகன் சூரபதுமனோடு வான் வெளியில் இந்தத் தலத்தில் யுத்தம் செய்தார் என்பதாக ஐதிகம்.
எனவே இங்கே சென்றாலே வாழ்வில் பகை அழியும் என்பது நம்பிக்கை. அதே தலத்தில் அருளும் கணபதி மிகவும் விசேஷமானவர் என்பதை பலரும் அறிவதில்லை. அந்த கணபதிக்கு வழிபாடு நடந்தபிறகே ஆலயத்தின் பிற சந்நிதிகளில் வழிபாடு நடைபெறும் என்றால் அந்த சந்நிதியின் மகிமை அளப்பரியது. வாருங்கள் அந்த விநாயகரின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

