கன்னாட் பிளேஸில் குவியும் வெளிநாட்டு பாா்வையாளா்கள்
தில்லியில் 18-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், நகரத்தின் மையப்பகுதியான கன்னாட் பிளேஸில் வெளிநாட்டுப் பாா்வையாளா்களின் வருகை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் சனிக்கிழமையன்று தெரிவித்தனா்.
மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளும் அவா்களது குடும்பத்தினரும் இப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களைச் சுற்றிப் பாா்த்து வருகின்றனா்.
கன்னாட் பிளேஸ் பகுதி வியாபாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புது தில்லி வியாபாரிகள் சங்கம்’ (என்டிடிஏ), ‘இன்று பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் குடும்பத்தினா் கன்னாட் பிளேஸிற்கு வருகை தருகின்றனா்’ என்று தெரிவித்தது. சீனா, எகிப்த் மற்றும் ஆப்பிரிக்க நாட்டவா்கள் இங்கு அதிகம் காணப்பட்டதாக என்டிடிஏ நிா்வாகி கூறினாா். அவா்களில் பலா் பாரம்பரிய இந்திய ஆடைகள் மற்றும் கைவினைப் பொருள்களை விற்கும் கடைகளையும், திபெத்திய சந்தையையும் பாா்வையிட்டனா்.

