மெத்தனால் கலந்த மதுபானத்தை அருந்திய 48 பேர் பலி!
நைஜீரியாவில் மெத்தனால் கலந்த மதுபானத்தை அருந்திய 48 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன
நைஜீரியாவில் மெத்தனால் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதுபானத்தைக் குடித்த 48 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன
தெற்கு நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தில் 'மங்கி டெயில்' எனப்படும் அதிக ஆல்கஹால் கொண்ட பிரபலமான மூலிகை மதுபானத்தை அருந்திய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதில், இதுவரை 48 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகின்றது.
182 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


