தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத்துறை சாா்பில் மாவட்ட சுற்றுலா வளா்ச்சி குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில அரசின் திட்டத்தின் கீழ் திருச்செந்தூா், வேம்பாா் கடற்கரை, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை, குதிரைமொழித்தேரி கற்குவேல் அய்யனாா் கோயில், சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலம், ஓட்டப்பிடாரம் வெள்ளைப்பட்டி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

