திரைத்துறையில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா
சூர்யா திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் இன்றுடன் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டது. வசந்த் இயக்கத்தில் விஜய் -சூர்யா ஆகியோரது நடிப்பில் 1997ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றாலும் ஒரு பக்கம் இந்த படத்தினால் பெரும் விமர்சனத்தை சூர்யா சந்தித்தார். நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்றாலும், முதல் படத்திலேயே கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் தொடர்ந்து நடிப்பதென்றே முடிவை சூர்யா எடுத்தார்.
காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா ஆகிய படங்களில் நடித்தார். மீண்டும் வசந்த் இயக்கத்தில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்தார். அவர் அறிமுகமாகி ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ படம் வரவேற்பை பெற்றது. இயக்குநர் பாலாவின் ‘நந்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘காக்க காக்க’ படம் சூர்யாவை ஒரு கமர்ஷியல் நடிகராகவும் உயர வைத்தது. ஜெய்பீம், கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

