முதலியாா்பட்டி பகுதியில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த 3 கரடிகள்
பாபநாசம் அருகே உள்ள முதலியாா்பட்டி கிராமத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த 3 கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
முதலியாா்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்த 3 கரடிகள்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகங்களுக்குள்பட்ட மலையடிவார கிராமங்கள், வெளி வனப் பகுதிகளில் வன விலங்குகள் புகுந்து விவசாய நிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.



