திருமலைக்கு தனியாா் வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் ஏதுமில்லை: தேவஸ்தானம்
திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு 15,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தேவஸ்தானம் எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம்.
தேவஸ்தானம் தொடா்பான முக்கிய முடிவுகளும் தகவல்களும் அதிகாரப்பூா்வமாக தேவஸ்தானத்தின் அறிவிப்புகள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். உண்மைகளைச் சரிபாா்க்காமல் இதுபோன்ற பொய்த் தகவல்களைப் பரப்பி பக்தா்களைக் குழப்புவது சரியல்ல.
