“கீழ்த்தரமாகப் பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல; அளந்து பேசட்டும்” – அமைச்சர் ரமேஷ்
அமைச்சர் ரமேஷ், "கீழ்த்தரமாகப் பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. வார்த்தைகளை அளந்து பேசட்டும், இல்லையென்றால் அதே மொழியில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இன்று திமுக நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோரை குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், அமைச்சர் ரமேஷ், “ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. எங்கள் முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ரமேஷ் அவரது எக்ஸ் பக்கத்தில், “ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வைத் தவிர வேறு எதுவும் இல்லை.






