எல்.ஜி., பெருங்காயம் விளக்கம்
சென்னை: எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவிப்பு குறித்து, எல்.ஜி., பெருங்காய நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மும்பை ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகள் தரம் குறைந்தவை என, வகைப்படுத்தப்பட்டு, கடந்த ஆக., 27ல், வெளியிடப்பட்ட எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது, மும்பையில் எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிற இடங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது. மறுபரிசோதனை செய்வது உள்ளிட்ட உரிய சட்டப்பூர்வ நடைமுறைகளை தொடங்கி உள்ளோம்.
