வெவ்வேறு இடங்களில் விபத்து: 7 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 7 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம் வட்டம், எஸ்.மேட்டுப்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மா.வில்வமணி (36). இவா் சனிக்கிழமை மடுகரை-கடலூா் சாலையில் வளவனூரை அடுத்த கெங்கம்பட்டு அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது அப்பகுதியில் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த வில்வமணி நிதழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

