இடைத்தோ்தலில் தவெக வெற்றி உறுதி: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி என்றாா் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
இதுகுறித்து, நாகையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாகை மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக ரூ.10.16 கோடி தேவைப்படும் நிலையில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வா் மதிப்பீடு தயாரித்து தாருங்கள் என்று கூறியுள்ளாா்.

