வீடியோ மோகம் எதையும் செய்யும்.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பரபரப்பான சாலையில் வீடியோ எடுப்பதற்காக காரை நிறுத்திய பெண் ஒருவரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; அதில் ஆம்புலன்ஸ் சிக்கிய வீடியோ, வேகமாக இணையத்தில் பரவியது.
காரின் கதவை திறந்த நிலையில், அந்த பெண், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார். ஒரு கையில், போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார். பின்னால் வந்து நின்ற ஆம்புலன்ஸ் வழியின்றி நின்றது; அதன் சைரன் அலறியபடி இருந்தது.
லோகேந்திர சர்மா என்பவர் எடுத்த அந்த வீடியோவில், இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. 'ஆம்புலன்ஸ் சைரன், பின்னணி இசை அல்ல' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட வீடியோவில், 'உங்கள் வீடியோ காத்திருக்கலாம்; இன்னொருவரின் உடல் நிலை காத்திருக்காது' என்று கூறியுள்ளார்.

